ஜெயங்கொண்டம்: திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் விரக்தியடைந்த மணமகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கவரப்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (26). ஒசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை ஆராவமுதன் இறந்துவிட்டார். தாய் வனஜா மட்டும் உள்ளார். இவரது இரண்டு சகோதரிகளும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சீனிவாசனுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை நிச்சயம் செய்து திருமணத்திற்கு நாள் குறித்தனர். திருமண பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு வைக்கப்பட்டு வீட்டில் பந்தல்கால் நடபட்டது. நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.