சென்னை: நடிகர் ரஜினிகாந்த மகள் சவுந்தர்யா, விசாகன் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றது. ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண சடங்குகள் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கின. 10 மணி அளவில் மணமக்கள் மணமேடைக்கு வந்தனர். கெட்டி மேளம் முழங்க மணமகள் சவுந்தர்யா கழுத்தில் விசாகன் தாலி கட்டினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்பாபு, பிரபு, தனுஷ், விக்ரம்பிரபு, நடிகைகள் ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதிதிராவ் ஹைதரி, இயக்கு
னர்கள் எஸ்.பி.முத்துராமன், செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார், கஸ்தூரி ராஜா, பி.வாசு, தயாரிப்பாளர்கள் ஏவிஎம்.சரவணன், எஸ்.தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.