பழநி: பழநி அருகே கள்ளக்காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்து கள்ளக்காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி சிவகிரிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி மோகனபிரியா(20). இருவரும் 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, 4 மாதத்திற்கு முன்பு மோகனபிரியா குழந்தையுடன் தட்டான்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு, மோகனபிரியாவிற்கும் பழைய ஆயக்குடியை சேர்ந்த கார்த்தி(21) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மோகனபிரியா ஆயக்குடியில் உள்ள கார்த்தியின் தோட்டத்திற்கு சென்றார்.