சிலிண்டர் வெடித்து குடிசையில் தீவிபத்து

பெரம்பூர்: வண்ணாரப்பேட்டை மூலகொத்தலம் ராம்தாஸ் நகரை சேர்ந்தவர் இருசம்மாள் (55). இவர் வீட்டின் மாடியில் குடிசையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  நேற்று மதியம் வீட்டில் அனைவரும் வெளியே இருந்த நிலையில், இவருடைய மகள் விமலா டீ போடுவதற்காக சென்றபோது, காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் குடிசை தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து வண்ணாரப்பேட்டை, ஏழுகிணறு ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: