மதுரை: போலீசாரின் மன அழுத்தத்தை போக்க கவுன்சலிங் நடத்த வேண்டுமென ஐகோர்ட் கிளை பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரிக்கத் துவங்கினர். அப்போது, வக்கீல் ஏ.கண்ணன் ஆஜராகி, தமிழகத்தில் போலீசார் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர். இதனால், சிலர் தற்ெகாலை செய்கின்றனர். சிலர், பிறரது தற்கொலைக்கு காரணமாக உள்ளனர் எனவே, இதுகுறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றார். அப்போது நீதிபதிகள், தங்கள் முறையீடு குறித்து பதிவாளரிடம் புகார் மனுவாக அளிக்கலாம் என்றனர். இதையடுத்து அவர் அளித்த மனுவில், ‘‘திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டைச் சேர்ந்த 2ம் நிலை காவலர் மணிகண்டன், பிறந்த நாளன்று விடுப்பு கிடைக்காததால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.