புதுடெல்லி: இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினர்.தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா. இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் ரமபோசா இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் அதிபர் ரமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையடுத்து அதிபர் ரமபோசா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மற்றொரு மூத்த தலைவரான ஆனந்த் சர்மாவும் உடனிருந்தார். அப்போது அவர்கள் இருதரப்பு உறவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.