சென்னை : உலக முதலீட்டாளர் மாநாட்டால் பயனில்லை என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். அரசியல், தேர்தல் காரணங்களுக்காவே நடத்தப்படுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அரசு ஆசிரியர்கள் போராட்டத்திற்கு மாநில அரசே காரணம் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.