அரூர்: அரூர் வனப்பகுதியில், கடும் வறட்சி நிலவுவதால், சாலையோரங்களில் உணவிற்காக குரங்குகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பருவ மழை பொய்த்துவிட்ட நிலையில், அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், எங்கும் வறட்சி தாண்டவமாடுகிறது. மக்கள் குடிநீருக்காக குடங்களுடன் அலைந்து வருகின்றனர். இதற்கு குரங்குகளும் தப்பவில்லை. வனப்பகுதிகளில் வறட்சி காரணமாக உணவு ஏதும் கிடைக்காத குரங்குகள் சாலையோரம் வந்து காத்திருக்கிறது.