பல்லாவரம்: மாங்காடு அடுத்த பட்டூர் பிரதான சாலையை சேர்ந்தவர் கன்னிலால் (40). ராஜஸ்தானை சேர்ந்த இவர், கடந்த 13 ஆண்டுகளாக மல்லாராம் (60) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். இருவருக்கும் இடையே வாடகை உயர்வு குறித்து பிரச்னை இருந்துள்ளது.இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் கொடுத்தபோது இருவரையும் போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது ஏப்ரல் மாதம் கடையை காலி செய்ய வேண்டும் என்று போலீசார் எழுதி வாங்கியதாக தெரிகிறது.நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு கன்னிலால் வீடு திரும்பினார். அப்போது அவரது கடையின் முன்பு ஒரு கார் மற்றும் சரக்கு வேன் வந்து நின்றன.