புதுடெல்லி: ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில்வேக்கு சொந்தமான ஐ.ஆர்.சி.டி.சி. ஓட்டல்களை பராமரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக லாலு பிரசாத் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.