சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வாயில் முன் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். புதிய தேர்வு கட்டுப்பாடு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மற்றும் வேலூரிலும் அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.