சென்னை: திருவொற்றியூர்- எண்ணூர் விரைவு சாலையில் இரு சக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சரண் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.