மாஸ்கோ: ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவின் மாக்னிடோகோர்ஸ்க் நகரில், 10 மாடிகளை கொண்ட குடியிருப்பின் ஒரு வீட்டில், இரு தினங்களுக்கு முன்பு சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த அதிர்வில் 48 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால், இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.