எய்ம்சில் வெற்றிகரமாக நடந்தது ஜனாதிபதி கோவிந்துக்கு இருதய அறுவை சிகிச்சை

புதுடெல்லி:  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடந்த வெள்ளியன்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர், மறுநாள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு இருதயத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.இது குறித்து ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனாதிபதிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து, மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருகிறது,’ என கூறப்பட்டுள்ளது….

The post எய்ம்சில் வெற்றிகரமாக நடந்தது ஜனாதிபதி கோவிந்துக்கு இருதய அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: