ரோம்: இத்தாலி நாட்டில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இத்தாலி நாட்டின் அப்ரூஜ்ஜோ பகுதியில் காலேலாங்கோ நகர் அருகே நள்ளிரவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி உள்ளது. இதன் காரணமாக வீடுகள் குலுங்கின. தூக்கத்தில் இருந்து எழுந்த மக்கள் அலறியடித்து வீட்டைவிட்டு வெளியேறினார்கள். பொதுமக்கள் சாலைகளில் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பெரும்பாலான இடங்களில் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன.