புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை அமைப்பாக மத்திய தகவல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதில், தலைமை தகவல் ஆணையர் உள்பட மொத்தம் 11 ஆணையர் பதவிகள் உள்ளன. இதில், 3 ஆணையர்கள் மட்டுமே பணியில் இருந்து வந்தனர். இந்நிலையில் காலியாக உள்ள தகவல் ஆணையர் பணியிடங்களுக்கு புதிதாக 4 தகவல் ஆணையர்கள் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவாவை மத்திய அரசு நேற்று நியமனம் செய்தது. இவர் 1981ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரி. இங்கிலாந்துக்கான இந்திய தூதராக பணியாற்றியவர்.