சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: மீனவர்களுக்கு எதிராக சிங்கள அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி தர இலங்கை அரசு மறுத்து வருகிறது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால், கண்டிப்பாக 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ₹1.50 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியது. அதன்படி தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ₹60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை அரசின் இந்த அத்துமீறல்கள் எதையும் இந்தியா கண்டிக்காததுதான் இலங்கைக்கு அதீத துணிச்சலை தந்துள்ளது.
.