பிற மருத்துவர்களை கொண்டு எச்.ஐ.வி ரத்த தானம் கொடுத்த இளைஞரின் உடற்கூறாய்வை செய்ய முடியுமா? : நீதிமன்றம் கேள்வி

மதுரை : எச்.ஐ.வி ரத்த தானம் கொடுத்த இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. தனது மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக தாய் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் அல்லாதோர் உடற்கூறாய்வை செய்ய மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது இளைஞரின் உடலை மதுரையை தவிர வேறு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூத்த தடயவியல் மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய முடியுமா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த கேள்விக்கான பதிலை சற்று நேரத்தில் தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும்  பிரேத பரிசோதனை கூடங்களில் நிரந்தரமாக வீடியோ பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த முடியுமா என கேட்டு தெரிவிக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: