அருமனை: குமரி மாவட்டம் அருமனை அருகே கால்நடைகளுக்கு நேர்த்திக்கடன் செய்யும் புகழ்பெற்ற அளப்பங்கோடு ஈஸ்வர கால பூதத்தான் கோயில் உள்ளது. இங்கு மண்டல கால திருவிழாவின் நிறைவுநாளில் யானைகள் ஊர்வலம் நடத்தப்படும். இதையொட்டி, நேற்றுமுன்தினம் கேரளாவில் இருந்து அளப்பங்கோட்டுக்கு 3 யானைகள் கொண்டுவரப்பட்டு ஊர்வலத்தில் பங்கேற்றன. ஊர்வலம் முடிந்து யானைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.