அந்தமான் நிகோபாரில் 3 சிறிய தீவுகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு

டெல்லி: அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிலுள்ள மூன்று சிறிய தீவுகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள ரோஸ் தீவு, நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு ஆகிவை பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளன. ரோஸ் தீவுகளின் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு எனவும், நெயில் தீவு பெயர் ஷாகீத் த்வீப் எனவும் ஹேவ்லாக் தீவு பெயர், சுவராஜ் த்வீப் எனவும் மாற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மத்திய உள்துறை அமைச்சகம் செய்து முடித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது 30-ம் தேதி அந்தமான் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய பெயரைத் தீவுகளுக்கு சூட்ட உள்ளார்.

முன்னதாக இரண்டாம் உலகப்போரின்போது அந்தமான் தீவை ஜப்பான் முதலில் கைப்பற்றியது. அதன்பின் மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. கடந்த 1943-ம்ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் ஆங்கிலேயர்களிடம் இருந்து அந்தமான் விடுவிக்கப்பட்டதாக பிரகடனம் செய்தார்.  போர்ட் பிளையரில் தேசியக் கொடி ஏற்றிவைத்தார். அதுமட்டுல்லாமல், அந்தமான் நிகோபர் தீவுகளை சாஹேத் மற்றும் சுவராஜ் தீவுகளாக பெயர் சூட்டப்பட வேண்டும் என்று நேதாஜி விரும்பியுள்ளார்.

இது குறித்து நேதாஜியின் உறவினரும், மேற்கு வங்க பாஜக துணைத்தலைவருமான சந்திரகுமார் போஸ், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி இருந்தார். அதில், நாடு 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் இந்த வேளையில் அந்தமான் தீவுகளுக்கு சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் போர்ட்பிளையர் செல்லும் பிரதமர் மோடி, கடந்த 1943-ம் ஆண்டு நேதாஜி கொடியேற்றிய அதே ஜிம்கானா மைதானத்தில் 150 மீட்டர் கம்பத்தில் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அப்போது நடைபெறும் நிகழ்ச்சியில் தீவுகளின் பெயர்மாற்றம் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: