தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தலையில் குண்டு பாய்ந்து இறந்துள்ளதாக உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் , சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் 100-வது நாளான்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணி வன்முறையில் முடிவடைந்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.