ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செக் மோசடி புகாரில் அரசுப்பள்ளி ஆசிரியை மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேமலைக்கவுண்டர் என்பவரிடம் ரூ.40 லட்சம் கடன் பெற்ற ஆசிரியை சுகுணா அதற்காக அவரிடம் காசோலையை அளித்தார். ஆசிரியை சுகுணா அளித்த காசோலை வங்கியில் இருந்து திரும்பியதால் சேமலைக்கவுண்டர் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.