லண்டன்: பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்படும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார். பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பிச் செலுத்தவில்லை. இது தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், விஜய் மல்லையா கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்றார். விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியும் விஜய் மல்லையா நாடு திரும்பவில்லை. இதையடுத்து மல்லையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து அவருடைய சொத்துகளை முடக்கியது. மேலும் அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்தனர்.