கொள்ளையடிக்க துப்பாக்கி தந்து உதவிய ஆளுநர் மாளிகை பாதுகாவலருக்கு சிறை

சென்னை : கொள்ளையடிக்க துப்பாக்கி தந்து உதவிய ஆளுநர் மாளிகை பாதுகாவலருக்கு ஜனவரி 2ம் தேதி வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் குமார் உள்பட 7 பேருக்கு ஜனவரி 2ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. 7 பேரையும் மதுரை சிறையில் அடைக்க மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பழனிவேல் உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் 6ம் தேதி மேலூர் மருத்துவர் பாஸ்கரன் வீட்டில் அவரது மனைவியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்தது. கொள்ளைக்கு துப்பாக்கி தந்து உதவியதாக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய குமார் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: