மன்னார்குடி : திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் வனத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரூ.1 லட்சம் மதிப்பு தேக்குமரங்களை பல்கலைக் வளாகத்தில் பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடைபெற்று வருகிறது. தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது பற்றி ஓய்வுபெற்ற வருவாய் ஊழியர் பன்னீர் என்பவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.