சென்னை : திருவல்லிக்கேணியில் கர்ப்பிணியான தன்னை கடத்தியதாக பெண் நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. கடத்தப்பட்டதாக கூறிய கஸ்தூரி என்பவர் கர்ப்பிணியே இல்லை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது. திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக சென்ற கஸ்தூரியை காணவில்லை என்று கணவர் புகார் அளித்துள்ளார். போலீசார் தேடிய நிலையில் யாரோ கடத்திச்சென்று குழந்தை பிறந்த பின் அதை பறித்ததாக கஸ்தூரி புகார் கூறினார். போலீஸ் கஸ்தூரியிடம் விசாரித்ததில் அவர் கர்ப்பமாகமலேயே நாடகமாடியது தெரிய வந்தது.