அம்பத்தூர் அருகே கழிவுநீர் கால்வாயில் பெண் சிசு சடலம்: போலீசார் விசாரணை

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த பாடி, படவட்டம்மன் கோயில் 2வது குறுக்கு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயை  நேற்று காலை மாநகராட்சி ஊழியர் ஒருவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது கால்வாயில் பிளாஸ்டிக் பை ஒன்று கிடந்தது.  அந்த பையை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில், பிறந்து சில மணி நேரமான பெண் சிசு தொப்புள் கொடியுடன் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுபற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், அங்கு  ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து, சிசுவை சோதனை செய்தபோது, இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கொரட்டூர் போலீசார், சிசு சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலில் பிறந்ததால் பெண் சிசுவை கொன்று கழிவுநீர் கால்வாயில் வீசினார்களா அல்லது பெண் குழந்தை என்பதால் வளர்க்க முடியாமல் கொன்று பிளாஸ்டிக் பையில் ைவத்து கழிவுநீர் கால்வாயில் வீசினார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெற்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: