மதுரை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: தமிழக அரசை பாஜ காப்பாற்றும் என நினைக்கிறார்கள். பாஜ தன்னையே காப்பாற்ற முடியாத நிலையில் எப்படி தமிழக அரசை காப்பாற்றும்? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வட மாநிலத்தில் பாஜவுக்கு பெரிய அளவு தோல்வி இல்லை என கூறுவது, அவர் மோடி அரசுக்கு எடுபிடியாக இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. பெரிய தோல்வி இல்லை என தமிழிசையும் விரக்தியில் பேசிக் கொண்டிருக்கிறார். பாஜ கட்சி இனிமேல் இருக்கப் போவதில்லை என்பது அவருக்குத் தெரிந்த ஒன்றே. தமிழிசை அக்கட்சியிலிருந்து விலகி வேறு ஏதாவது இயக்கத்தில் சேர்ந்தால் வார்டில் போட்டியிட்டாவது ஜெயிக்க முடியும்.