சென்னை: சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரோகிணி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். சேலம் பூலாவாரிக்கிராமத்தில் மக்களுக்கு இடையூறாக உள்ள அதிமுக கொடிக்கம்பத்தை அகற்ற கோரிய வழக்கில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டதை அடுத்து சேலம் ஆட்சியர், நெடுஞ்சாலை பொறியாளர் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கு தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஜன.22-க்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.