சென்னை: சாலையோரம் வசித்த மூதாட்டியை 5 நிமிடத்தில் அவரது குடும்பத்தினரிடம் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்தனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வசிப்பவர்களை மீட்டு வசிப்பிடங்களில் சேர்க்கும் பணியை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதன்படி இதுவரை 1,786 தெருவோரம் வசிக்கும் வீடற்ற ஆண்கள், பெண்கள், முதியோர்கள், திருநங்கைகள் ஆகியோர் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரான உத்திரபிரதேசத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அச்சைலால் (53) என்பவரை அவரது குடும்பத்தினரிடம் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் வீடற்றவர்கள் தொடர்பான தகவலை 1913, 94451 90472, 044-2530 3849 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தனர்.