சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி நிறுவனத்திற்கு சொந்தமான ‘ரீஜெண்டா’ என்ற நட்சத்திர ஓட்டல் சென்னை அருகே ஏகாட்டூரில் ஓஎம்ஆர் சாலையில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஓட்டல் மற்றும் ஷாப்பிங் மால் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சரும், நிர்வாகியுமான ரகுபதி தலைமை தாங்கினார். நிறுவன இயக்குனர் அண்ணாமலை ரகுபதி வரவேற்றார். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய ஓட்டல் மற்றும் ஷாப்பிங் மால் மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார். முன்னதாக லிப்டில் சென்று ஷாப்பிங் மால் வளாகத்தை ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து முரசொலி அறக்கட்டளை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் கஃபே 24 ரெஸ்டாரண்டை திறந்து வைத்தார்.