ஓஎம்ஆர் சாலை ஏகாட்டூரில் ‘ரீஜெண்டா’ நட்சத்திர ஓட்டல் உதயம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி நிறுவனத்திற்கு சொந்தமான ‘ரீஜெண்டா’ என்ற நட்சத்திர ஓட்டல் சென்னை அருகே ஏகாட்டூரில் ஓஎம்ஆர் சாலையில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஓட்டல் மற்றும் ஷாப்பிங் மால் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சரும், நிர்வாகியுமான ரகுபதி தலைமை தாங்கினார். நிறுவன இயக்குனர் அண்ணாமலை ரகுபதி வரவேற்றார். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய ஓட்டல் மற்றும் ஷாப்பிங் மால் மற்றும்  கல்வெட்டை திறந்து வைத்தார். முன்னதாக லிப்டில் சென்று ஷாப்பிங் மால் வளாகத்தை ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து முரசொலி அறக்கட்டளை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் கஃபே 24 ரெஸ்டாரண்டை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், திருச்சி தெற்கு எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பூங்கோதை தமிழரசன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திருப்போரூர் ஒன்றிய திமுக செயலாளர் இதயவர்மன், பையனூர் சேகர் மற்றும் கற்பக வினாயகா கல்விக்குழும நிர்வாகிகள் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: