பாஜக செல்வாக்கை இழந்து உள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது: ரஜினி பேட்டி

சென்னை: பாஜக செல்வாக்கை இழந்து உள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாவட்டங்களுக்கான சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அம்மாநில முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் 50,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

இதேபோல் அக்கட்சியின் முன்னணி வேட்பாளர்கள் பலரும் வெற்றியை நெருங்கியுள்ளனர். சத்தீஸ்கரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. 199 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் பெரும்பான்மையை பிடிக்க 100 இடங்கள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி 105 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 117 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் மிசோ தேசிய முன்னணி கட்சி 26 இடங்களை கைப்பற்றியுள்ளது. மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஆளும் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் ரஜினி, 5 மாநில தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவு என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: