கண்டக்டர், டிரைவருக்கு அடி : நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி போராட்டம்

தண்டையார்பேட்டை: சென்னை தண்டையார்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து கோயம்பேடுக்கு மாநகர பஸ் (த.எ.159பி) இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்று மதியம் கோயம்பேட்டில் இருந்து சுங்கச்சாவடிக்கு புறப்பட்டது. சுங்கச்சாவடியை சேர்ந்த கண்டக்டர் ராஜேஷ் (29), திருவொற்றியூரை சேர்ந்த டிரைவர் ஜோதிபாசு (39) ஆகியோர் பணியில் இருந்தனர். தண்டையார்பேட்டை நிறுத்தத்தில் பஸ் நின்றது. அப்போது, 4 போதை வாலிபர்கள் ஏறினர். அவர்களிடம் கண்டக்டர் ராஜேஷ் டிக்கெட் எடுக்கும்படி கேட்டார். அதற்கு அவர்கள், டிக்கெட் எடுக்க முடியாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கிவிட்டு, தப்பிவிட்டனர்.  இதற்கிடையில் போலீசார், அந்த வாலிபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அந்த பஸ்சை எடுக்காமல், டிரைவர் அங்கேயே நிறுத்திவிட்டார். இதனால், சுமார் ஒரு மணிநேரம் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், பஸ்சை கொண்டு சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: