சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பள்ளி மாணவன், 3 பேர் தன்னை காரில் கடத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளான். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் தஸ்தகீர் பாஷா. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை ெசய்து வருகிறார். இவரது மகன் கவுஸ் பாஷா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இதையடுத்து தஸ்தகீர் பாஷா நேற்று முன்தினம் இரவு அண்ணா சாலை காவல் நிலையத்தில் மகன் மாயமானதாக புகார் அளித்தார். அதன்படி போலீசார் மாயமான பள்ளி மாணவனின் புகைப்படங்களை ைவத்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த பள்ளி மாணவரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.