நீதிமன்ற ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணி விண்ணப்ப நிலை இணையதளத்தில் வெளியீடு

சென்னை: போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணிக்காக விண்ணப்பித்தவர்களின், விண்ணப்ப விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஜெராக்ஸ் ஆபரேட்டர், துப்புரவு பணியாளர், மசால்சி உள்ளிட்ட 3 வேலைகளுக்கான 8 பணியிடங்களை நிரப்புவதற்காக, நீதிமன்றம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதன்படி 2500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்தநிலையில் அனைத்து விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்டு அதில் சரியான ஆவணங்களை வைக்காத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் சரியாக பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களை மறுபடியும் பூர்த்தி செய்ய ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஆகியவற்றை www.districts.ecourts.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 5ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு வெளியிட்ட அறிப்பாணையில் கூறப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: