சென்னை: நடிகை காயத்ரி ரகுராம் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் நன்றாக இருக்கிறேன். என் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் குறித்து எனக்கு வருத்தம் இல்லை. யாரோ என்னைப் பழிவாங்குகிறார்கள். அது யாரென்று எனக்கு தெரியவில்லை. என்னை பற்றி என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை. நான் தவறாக நடந்திருந்தால் அதை நானே ஒப்புக்கொள்வேன். அன்றைய தினம் என்ன நடந்தது என்று எனக்கும், எனது அம்மாவுக்கும், என் உடன் இருந்தவர்களுக்கும் தெரியும். காவலர்கள் யாரும் என்னை வீட்டில் விடவில்லை. நான் குடிபோதையிலும் வரவில்லை. அனைவரும் என்னைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.