விருதுநகர்: கஜா புயல் நிவாரணத்திற்காக, விருதுநகரில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி, தனது சேமிப்பான ரூ.2 ஆயிரத்து 6ஐ தாசில்தாரிடம் வழங்கினார். விருதுநகர் மேலரத வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஹரிணி ஸ்ரீ, அங்குள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தினசரி பாக்கெட் மணியாக பெற்றோர் வழங்கும் 10 ரூபாயில், செலவு போக பாக்கியை வீட்டு உண்டியலில் சேமித்து வைத்து வந்தார்.