இமாச்சல் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலி

நாஹன்: இமாச்சலின் ரேணுகாஜி பகுதியில் இருந்து நாஹன் என்ற இடத்துக்கு நேற்று முன்தினம் மாலை தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. மாலை 4.30 மணியளவில் காத்ரி கிராமம் அருகே பஸ் அதிவேகமாக சென்றது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஜலால் ஆற்றின் பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு 40 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில், 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்தனர். இது தவிர காயமடைந்த 25 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: