திருநெல்வேலி நம்பியாறு நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராமநாதபுரம் வட்டம் நம்பியாறு நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாசனப் பகுதிகளுக்கும், பாசன பருவ சாகுபடிக்கும் நாளை முதல் மார்ச் 31 தேதி வரை 60 கன அடிக்கு மிகாமல் நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார். நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொடுமுடி அணையிலிருந்தும் நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: