கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1,400 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 3 நாட்களில் மின்சாரம் வழங்கப்படும் என்றும், நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் மீட்பு பணிகள் முடிந்து இயல்பு நிலை திரும்பும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: