சூரத்: பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப புழம் பெயர்வது பறவைகளின் வழக்கம் ஆகும். குஜராத் மாநிலம் சூரத் நகர் இப்போது பறவைகள் சரணாலயமாக காட்சி அளித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் அல்ல செர்பியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் கூட பறவைகள் இங்கு தஞ்சம் அடைந்துள்ளன. புறாக்கள், நாரைகள், கொக்குகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் உணவையும், நீரையும் தேடி இங்கு வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.