அண்ணா பல்கலைக்கழகம் நிவாரணம்

சென்னை: கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இன்று நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகின்றன. கஜா புயலால் நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்பட பல மாவட்டங்களில் கடும் சேதமடைந்துள்ளன. இதனால் அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களும் நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, அழகப்பா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் அண்டு பிளானிங், குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை சேர்ந்த ஆசிரியர்களிடம் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிவாரண பொருட்கள் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்

கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: