புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம்: ஜனாதிபதி அறிவிப்பு

சென்னை: `கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசாங்கமும், இந்திய மக்களும் துணை நிற்பார்கள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். இதுகுறித்து இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில் கூறி இருப்பதாவது: `கஜா’’ புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் விசாரித்தேன்.

புயலால் உயிர் இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்கு இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: