குரூப் 2 தேர்வு விடையில் தவறா? விண்ணப்பிக்க இன்றே கடைசி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவியில் அடங்கிய 1,199 தேர்வு நடந்தது, இதை தொடர்ந்து, இத்தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் 14ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த உத்தேச விடைகளில் தவறு இருப்பின் விண்ணப்பதாரர் அதனை தேர்வாணையத்திற்கு தெரிவித்து சரியான விடைகளை கோரலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் விடைக்குறிப்புகளில் தவறு இருந்தால் அதற்கான கோரிக்கைகளை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர் மட்டுமே 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதுவரை சுமார் 1000 பேர் வரை தங்களுடைய கோரிக்கையை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: