சென்னை:தமிழகம் முழுவதும் ‘கஜா’ புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் இன்றும், நாளையும் நடைபெறுவதாக இருந்த சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது பிறகு அறிவிக்கப்படும் என்றும், சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் எனவும் பல்கலை தெரிவித்துள்ளது.