கஜா புயல் பாதிப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் முதல்வரிடம் விவரம் கேட்பு

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புயல் சேத விவரங்கள் பற்றி விளக்கினார்.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது முதல்வர், புயல் தொடர்பாக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புயலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், போர்க்கால அடிப்படையில் நடைபெறும் நிவாரணப் பணிகள் குறித்தும், 471 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 82,000 பொதுமக்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதிகள் உட்பட செய்யப்பட்டு வரும் அனைத்து நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, கஜா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து விரிவான அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: