கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன : மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்

சென்னை : கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் அளித்துள்ளது. கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கஜா புயலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 6 மாவட்டங்களில் உள்ள 421 முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: