துறையூர் அருகே 6 கி.மீ தூரம் ஏரிக்கு கரை அமைத்த கிராம மக்கள்

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ளது வைரிசெட்டிபாளையம். இங்குள்ள ஜம்பேரி மாவட்டத்தின் 2வது பெரிய ஏரியாகும். 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி,  வெங்கடாசலபுரம் மாராடி உள்ளிட்ட 7 ஏரிகளுக்கு தாய் ஏரியாகும்.  ஜம்பேரி நிறைந்தால்தான் மற்ற ஏரிகளுக்கு நீர் செல்லும். பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு தென்புறம் மட்டுமே கரை இருந்தது. மற்ற மூன்று பக்கமும் கரைகள் இல்லாததால் ஏரியின் நிலம் 180 ஏக்கர் வயல்களாக ஆக்ரமிக்கப்பட்டு விவசாயம் நடைபெற்று வந்தது. இதனால் ஏரியின் கொள்ளளவு குறைந்து. மழைக்காலங்களில் நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

1984ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்ற போது இப்பகுதி மக்கள் ஜம்பேரி தூவாரப்படாததை கண்டித்தும்  மூன்று பக்கம் கரை அமைக்கவும் கோரி இடைத்தேர்தலை புறக்கணித்தனர். அப்போது பிரசாரத்திற்கு வந்த முதல்வர் எம.ஜி.ஆர்  ஜம்பேரியை பார்வையிட்டு  ஏரியை சீரமைக்க உத்தரவிட்டார்.  பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,  திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 34 வருடங்களாக ஆக்ரமிப்பை அகற்றவும் 3 பக்கம் கரைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதையடுத்து போராட்டம் செய்யப்போவதாக பொதுமக்கள் அறிவித்தனர்.

வாக்காளர் விழிப்புணர்வு சங்கமும் போராடப் போவதாக அறிவித்தது. இதையடுத்து துறையூர் தாசில்தார் அலுவலகத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்படி வருவாய்த்துறையினர் அளவீடு செய்து அளந்து கொடுத்தனர். இதையடுத்து வைரிசெட்டிபாளையம், கோட்டபாளையம்,  வலையப்பட்டி, மாராடி உள்ளிட்ட 4 கிராம மக்கள்  ஜம்பேரி பராமரிப்பு மற்றும் பாசன பாதுகாப்புகுழு ஏற்படுத்தப்பட்டு ஏரியின் மூன்று புறமும் ரூ.15 லட்சம் செலவில் சுமார் 6 கிமீ நீளத்திற்கு 8 அடி அகலம், 6 அடி உயரத்திற்கு கரை அமைத்ததுடன் 180 ஏக்கர் நிலத்தையும் மீட்டு அமைதியான முறையில் அரசை நம்பாமல் தாங்களே நிதி திரட்டி கரை அமைத்து சாதனை செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: