சென்னை: சென்னையில் அம்மா உணவகத்தில் இட்லியை சாப்பிட்டு பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்துள்ளார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, திடீரென மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்றார். முதல்வர் பழனிசாமியுடன், துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் சென்றனர்.
அப்போது அம்மா உணவகத்தை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் அமைச்சர்களுடன் அங்கு விற்பனையாகும் இட்லியை வாங்கி சாப்பிட்டு பார்த்தார். தொடர்ந்து உணவின் தரம் மற்றும் உணவகத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்குமாறு அங்குள்ள பணியாளர்களிடம் கூறிவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி