கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் கல்வி, மருத்துவத்துக்காக 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் கல்வி, மருத்துவத்திற்காக 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம்  ரூ.2 லட்சம் நிதி உதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கருணாநிதி தந்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்பு நிதியாக போட்டு வட்டித் தொகையில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகை 2005 நவம்பர் முதல் வழங்கப்பட்டு வருகிறது. 5 கோடியில் 10.1.2007ல் கருணாநிதி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார்.

மீதமுள்ள 4 கோடியில் கிடைக்கும் வட்டியில் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.4 கோடியே 67 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கிடைத்த வட்டி தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து போகும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலை அனுப்பப்படுகிறது.இந்த தகவலை திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: